மத்திய அரசின் மலிவு விலை வாடகை வீடு திட்டம் குறித்து ஏன் விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை…. அண்ணாமலை கேள்வி

0

மத்திய அரசின் மலிவு விலையில் வாடகை வீடுகள் வழங்கும் திட்டம் குறித்து தமிழக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தாதது ஏன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையை அடுத்துள்ள வல்லம்-வடகாலில் பாக்ஸ்கான் நிறுவன ஊழியர்களுக்காக ரூ.707 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மகளிர் விடுதியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில்,

2020-ம் ஆண்டு மலிவு விலையில் வாடகை வீடுகள் வளாகத் திட்டம் தொடங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

வல்லம்-வடகாலில் திறக்கப்பட்டுள்ள தங்கும் விடுதி மத்திய அரசின் மானியம் மற்றும் வங்கி கடனுதவியில் கட்டப்பட்டுள்ளது என்றார். மலிவு விலையில் வாடகை வீடுகள் கட்டும் திட்டத்தை, வழக்கம் போல் மக்களுக்கு தெரிவிக்காமல், முதல்வர் புறக்கணித்து விட்டாரா என, அண்ணாமலை கேட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here