WhatsApp Channel
தீவிரவாத தாக்குதலுக்கு இலக்கான இஸ்ரேலில் சிக்கியுள்ள பாலிவுட் நடிகை நஸ்ரத் பருச்சாவை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இஸ்ரேல் மீது காஸா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாதக் குழுவின் திடீர் ஏவுகணை தாக்குதல் இஸ்ரேலில் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஏவுகணை தாக்குதலில் 300 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 779 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “இஸ்ரேல் மீதான தீவிரவாத தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் பிடன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இஸ்ரேலுக்கு முழு ஆதரவையும் உறுதி செய்தார்.
இந்நிலையில் பாலிவுட் நடிகை நஸ்ரத் பருச்சா இஸ்ரேலில் சிக்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அவரது படக்குழுவினர் ஒருவர் கூறும்போது, துரதிஷ்டவசமாக இஸ்ரேலில் சிக்கிக்கொண்டார் நஸ்ரத். ஹைஃபா சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்பதற்காக இஸ்ரேல் சென்றதாக அவர் கூறினார்.
நேற்று மதியம் 12.30 மணியளவில் படக்குழுவினர் அவரை தொடர்பு கொண்டனர். அதன் பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
எனினும், அவரை பத்திரமாக இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எந்தவித பாதிப்பும் இன்றி அவர் இந்தியா திரும்புவார் என படக்குழு உறுப்பினர் ஒருவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Discussion about this post