WhatsApp Channel
‘2ஜி’ வழக்கில், எழுத்துப்பூர்வ வாதங்களை, 30 நாட்களுக்குள் தாக்கல் செய்ய, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘2ஜி’ அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக, சி.பி.ஐ., மற்றும் மத்திய அமலாக்க இயக்குனரகம் தொடர்ந்த வழக்குகளில், முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. கனிமொழி உள்ளிட்ட 14 பேரை சிபிஐ எம்பி விடுதலை செய்தது. சிறப்பு நீதிமன்றம் டிசம்பர் 2017 இறுதியில் தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி தினேஷ் குமார் சர்மா விசாரித்து வருகிறார்.
நேற்று நடைபெற்ற விசாரணையில் சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான அரசின் சிறப்பு வழக்கறிஞர் சஞ்சய் ஜெயின், மேல்முறையீட்டு மனுவை ஏற்க வேண்டியதன் அவசியத்தை வாதாடினார்.
வாதங்களை பதிவு செய்த நீதிபதி தினேஷ்குமார் சர்மா, சி.பி.ஐ., அமலாக்கத்துறை மற்றும் எதிர்மனுதாரர்கள் 10 பக்கங்களுக்கு மிகாமல் எழுத்துப்பூர்வ வாதங்களை அக்டோபர் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.விசாரணையை அக்டோபர் 31ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
Discussion about this post