WhatsApp Channel
குழந்தையின் உடலை அட்டைப் பெட்டியில் கொண்டு வரும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி மசூத் என்பவரின் மனைவி சௌமியாவுக்கு கடந்த 5 நாட்களாக பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது தண்ணீர் தேங்கி நின்றதால் ஆம்புலன்சை அழைக்க முடியவில்லை. முறையான மருத்துவ உதவி இல்லாத நிலையில், சௌமியாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.
பின்னர் அவர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து படகில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இறந்து பிறந்த குழந்தையின் உடல் மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
அதன்பின், மருத்துவமனை ஊழியர்கள் குழந்தையின் உடலை சரியாக சுற்றாமல் அட்டைப்பெட்டியில் வைத்து தந்தையிடம் ஒப்படைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் உடலை ஒப்படைக்க ரூ.2,500 லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. அட்டைப் பெட்டியில் குழந்தையின் சடலம் இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் குழந்தையின் உடலை அட்டைப்பெட்டியில் கொடுத்த விவகாரம் தொடர்பாக பிணவறை ஊழியர் பன்னீர்செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த 3 பேராசிரியர்கள் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
Discussion about this post