WhatsApp Channel
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று அதிகாலை முதல் சென்னை, கோவை, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றுள்ளதாகவும் எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளான சாட்டை துரைமுருகன், தென்காசி மதிவாணன், இடும்பவனம் கார்த்திக் உள்ளிட்டோர் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. அதேநேரம், சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர், வரும் 7ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, என்.ஐ.ஏ. சம்மன் அனுப்பப்பட்டது.
இதற்கிடையில், என்.ஐ.ஏ. இந்த ரெய்டுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Discussion about this post