WhatsApp Channel
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க 3 இந்திய வீரர்களுக்கு சீனா அனுமதி மறுத்துள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சூ நகரில் நாளை தொடங்குகிறது. ஆனால் தொடக்க விழாவுக்கு முன்னதாகவே கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், பீச் வாலிபால் உள்ளிட்ட சில போட்டிகள் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த 3 வீராங்கனைகளுக்கு சீனா அனுமதி மறுத்துள்ளது. 3 வீரர்களை பங்கேற்க அனுமதிக்க மறுத்த சீனாவுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் பங்கேற்கவிருந்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரின் சீனப் பயணம் சீனாவின் நடவடிக்கையால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்துக்கு சீனா உரிமை கொண்டாடி வரும் நிலையில், வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post