WhatsApp Channel
எந்த கோவிலுக்கு போனாலும், நம்மளை கருவறைக்குள்ளே விட மாட்டேங்கறாங்க.
கோவில்ல நடக்குற இந்த மாதிரி தீண்டாமையை எதிர்த்து தான் எங்க தலைவர் பெரியார் போராடினாரு…
அப்படியா பெருசு…
நீ தியேட்டருக்கு படம் பார்க்க போறியே,
உன்னை ப்ரொஜெக்டர் ரூமுக்குள்ளே விடுவாங்களா?
அதெப்படிண்ணே விடுவாங்க? நாம படம் பார்க்க தானே போறோம். நமக்கு ப்ரொஜெக்டர் ரூமுல என்ன வேலை?
சரி, ஹோட்டலுக்கு சாப்பிட போறியே, அங்கே கிச்சன்னுகுள்ளே போக விடுவாங்களா?
அதெல்லாம் விட மாட்டாங்க. நாம எதுக்கு கிச்சனுக்குள்ள போகணும்?
அதுவும் சரி தான், பேங்க்குக்கு போறியே, அங்கே கேஷியர் ரூமுக்குள்ளே உன்னை விடுவாங்களா?
அதெப்படி விடுவாங்க. பேங்க்குல வேலை செய்யறவங்க தான் அங்கெல்லாம் போக முடியும்.
வீட்டுலே ஒருத்தருக்கு ஆப்பரேசன். உன் பொண்டாட்டியாவே இருந்தாலும் ஆஸ்பத்திரியில சேத்தா வெளியிலதான் உக்காரணும். உள்ளே போக முடியாது.
அப்புறம், ஏண்டா நீ கருவறைக்குள்ளே மட்டும் போகணும்ன்னு கேக்கற? கோவிலுக்கு உன்னை விடலைன்னா தானே நீ கேள்வி கேக்கணும்.
கோவிலுக்கு சாமியை பாக்க தானே போற? பூஜை பண்ண போற ஆளு தானே கருவறைக்குள்ள போகணும்.
Discussion about this post