WhatsApp Channel
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 399 ரன்கள் குவித்தது.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் ஸ்ரேயாஸ் 105 ரன்களும், சுப்மான் கில் 104 ரன்களும், சூர்யகுமார் 72 ரன்களும், கேஎல் ராகுல் 52 ரன்களும் எடுத்தனர்.
அதன்பிறகு 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மாதிவ் ஷட் 9 ரன்னிலும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ரன் ஏதும் எடுக்காமலும் (0) ஏமாற்றம் அளித்தனர். ஆஸ்திரேலியா 9 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
தொடர் மழை காரணமாக ஆட்டம் மீண்டும் தொடங்குவது பாதிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 41 ஓவர்களில் 344 ரன்கள் தேவை. அதேவேளையில் இந்திய அணி வெற்றி பெற இன்னும் 8 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். மழை நின்று ஆட்டம் தொடருமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
Discussion about this post