WhatsApp Channel
புதிய குற்றவியல் சட்டங்கள் குடிமக்களின் தனிப்பட்ட உரிமைகளை பாதுகாக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியச் சட்டம் ஆகியவற்றுக்குப் பதிலாக 3 புதிய மசோதாக்களை நாடாளுமன்றத்தில் கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதாக்கள் சட்டமாக மாறினால், குடிமக்களின் தனிப்பட்ட உரிமைகள் பாதுகாக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இந்தியாவின் குற்றவியல் நீதி அமைப்பு காலனித்துவ சட்டங்களுடன் தொடர்புடையது. ஆனால் தற்போதைய 3 புதிய மசோதாக்களில் காலனித்துவ முத்திரை இல்லை. மாறாக இந்திய மண்ணின் சுவை இருக்கிறது. இந்த சட்டங்களின் கவனம் அரசியலமைப்பு, மனித உரிமைகள் மற்றும் குடிமக்களின் தனிப்பட்ட உரிமைகளைப் பாதுகாப்பதாகும்.
சுமார் 160 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தச் சட்டங்கள் முற்றிலும் புதிய அணுகுமுறை மற்றும் புதிய கட்டமைப்புடன் கொண்டு வரப்படுகின்றன என்று கூறிய அமித் ஷா, புதிய முயற்சிகளுடன், சட்டச் சூழலை உருவாக்க அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்றார். இந்த புதிய சட்டங்கள் தண்டனையை விட நீதியை வலியுறுத்தும் என்றும் அவர் கூறினார்.
Discussion about this post