WhatsApp Channel
திருப்பதியில் டிசம்பர் மாதத்திற்கான 300 தரிசன டிக்கெட்டுகள் இன்று ஆன்லைனில் வெளியிடப்படுகின்றன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தற்போது திருப்பதியில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. திருவிழா நாட்களில் லட்சக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகள் இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 1ம் தேதி முதல் 20ம் தேதி வரையிலான 300 தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.
பக்தர்கள் தரிசன டிக்கெட் பதிவு செய்து குறிப்பிட்ட தேதியில் திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்யலாம் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Discussion about this post