WhatsApp Channel
நாடு முழுவதும் அக்டோபர் 1 ஆம் தேதி பொது இடங்களில் தூய்மை இயக்கத்தை மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
‘சுகாதார சேவை’ என்ற பெயரில், நாடு முழுவதும், செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 2 வரை, மாபெரும் தூய்மை இயக்கம் நடக்கிறது. மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்த பிரச்சாரம் நடக்கிறது.
அதன் ஒரு பகுதியாக, ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியின் மூலம், அக்டோபர் 1ம் தேதி, காலை, 10 மணிக்கு, நாடு முழுவதும், பொது இடங்களில், மெகா துப்புரவுப் பணியை மேற்கொள்ள பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
பொது இடங்கள்
இதுகுறித்து, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஒரு தனித்துவமான வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி அக்டோபர் 1ம் தேதி காலை 10 மணிக்கு மெகா துப்புரவு பணி நடக்கிறது.
நாடு முழுவதும், சந்தை பகுதிகள், ரயில் பாதைகள், நீர்நிலைகள், சுற்றுலா தலங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட பொது இடங்கள் சுத்தம் செய்யப்படும். சமூகத்தின் அனைத்து தரப்பினரும் இதில் பங்கேற்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க
ஒவ்வொரு நகராட்சி, பஞ்சாயத்து, சிவில் விமான போக்குவரத்து, ரயில்வே, தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிற மத்திய அரசு துறைகள் மற்றும் பொது நிறுவனங்கள் தூய்மைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள், தனியார் அமைப்புகள் இவற்றை நடத்துவதற்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாவட்ட நிர்வாகங்களின் இணையதளங்களில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
அவ்வாறு கூறுகிறது.
Discussion about this post