WhatsApp Channel
சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18ம் தேதி கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்நிலையில் கடந்த 23 மற்றும் 24ம் தேதிகளில் சிலையை கரைக்க போலீசார் அனுமதி அளித்தனர்.
சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை, காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகள் கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதன்படி இன்று இரண்டாவது நாளாக சென்னையில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கரைக்கப்படுகிறது.
பிரமாண்டமான விநாயகர் சிலைகள் அனைத்தும் ராட்சத கிரேன்கள் மற்றும் தள்ளுவண்டிகள் மூலம் கடலில் கொண்டு செல்லப்படுகிறது. விநாயகர் சிலைகள் கரைக்கும் போது அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க இந்திய கடற்படையினர் ரோந்து படகுகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மரக்கட்டைகள் உள்ளிட்ட கழிவுகளை அகற்றி வருகின்றனர். விநாயகர் சிலைகள் கரைக்கப்படுவதை முன்னிட்டு சென்னையில் ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Discussion about this post