WhatsApp Channel
500 ஆண்டுகளுக்குப் பிறகு செருப்பு, டர்பன் அணியும் சூரிய வம்ச சத்திரியர்கள்!
22.01.2024 அன்று அயோத்தியில் ராமர் பிறந்த அதே இடத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அன்று வேறொரு முக்கியமான சம்பவம் நடக்க உள்ளது.
அயோத்தியை சுற்றியுள்ள 15 கிராமங்களில் வசிக்கும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் சூரிய வம்ச சத்திரியர்கள், 500 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல்முறையாக செருப்பு மற்றும் டர்பன் அணிய உள்ளனர்.
இஸ்லாமிய மன்னர் ஆட்சியில், ராமஜென்ம பூமி ஆலயம் இடிக்கப்பட்ட போது, அதை காப்பாற்ற வீரமாக போரிட்ட இந்த சூரிய குல சத்திரிய வம்ச வீரர்கள், தங்களது வீரத்தை மீறி கோவில் இடிக்கப்பட்டதால் மிகவும் மனம் வருந்தினர்.
மீண்டும் இதே இடத்தில் ராமர் கோவில் கட்டப்படும் வரை, நாங்கள் டர்பன் அணிய மாட்டோம், செறுப்பு அணிய மாட்டோம், குடை பயன்படுத்த மாட்டோம் என்று அனைத்து சூரிய வம்ச சத்திரியர்களும் சபதம் செய்தனர்.
தங்கள் முன்னோர்கள் போட்ட சபதத்தை மீறாமல், ஐந்து நூற்றாண்டுகளாக இந்த சூரிய வம்ச சத்திரியர்கள், கல்யாண காலங்களில் கூட செருப்பு டர்பன் குடை பயன்படுத்தாமல் வாழ்ந்து காட்டினர்.
இப்போது அனைத்து கிராமங்களிலும் சூரியவம்சம் சத்திரியர்களுக்கு 22 ஆம் தேதி அணிந்து கொள்வதற்காக புதியதாக டர்பன் தயாரிக்கப்பட்டு கிராமம் கிராமமாக வழங்கப்படுகிறது.
Discussion about this post