WhatsApp Channel
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, அண்ணா உள்ளிட்ட தலைவர்களை, “கிஷோர் கே சாமிக்கு அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டதை“, அடுத்து ….
“கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நசுக்காதீர்“ என கிஷோர் கே சாமிக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் திமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகி அளித்த புகாரின் பேரில் கிஷோர் கே சாமியை போலீசார் கைது செய்தனர்.
தலைவர்கள் குறித்து அவதூறு பரப்பியதற்காக கிஷோர் கே சாமி மீது 153, 505 (1 / பி) மற்றும் 505 (1-சி) பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.
கிஷோர் கே சாமி 15 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
தமிழக பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அண்ணாமலை ஐ.பி.எஸ் தனது ட்விட்டர் பக்கத்தில்….
.@arivalayam குடும்பத்தை,அதன் தலைவர்களை விமர்சிப்பது குற்றமெனில்,கருத்து சுதந்திரத்திற்கு இங்கு இடமேது
இதே அளவுகோல் பல தலைவர்களை கேலி பேசுவோருக்கு உண்டா?பொதுவாழ்க்கையில் மனஉறுதி முக்கிய பண்பு;திமுகவிற்கு அது இல்லை போல.
கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நசுக்காதீர்#KishoreKswamy— K.Annamalai (@annamalai_k) June 14, 2021
“திமுக குடும்பத்தை, அதன் தலைவர்களை விமர்சிப்பது குற்றமெனில்,கருத்து சுதந்திரத்திற்கு இங்கு இடமேது இதே அளவுகோல் பல தலைவர்களை கேலி பேசுவோருக்கு உண்டா…?
பொதுவாழ்க்கையில் மனஉறுதி முக்கிய பண்பு; திமுகவிற்கு அது இல்லை போல. கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நசுக்காதீர்…. #KishoreKswamy.
என்று ட்வீட் செய்துள்ளார் அண்ணாமலை ஐ.பி.எஸ்.
Discussion about this post