WhatsApp Channel
மலை ஆக்கிரமிப்பு குறித்து விசாரித்து செங்கம் அருகே உள்ள தேவாலயத்தை விரிவுபடுத்தி உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் – தனித் தொகுதி இளையாங்கண்ணி கிராமத்தில், 2,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, 150 அடி உயர மலையில், கார்மல் மாதா தேவாலயம், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. தற்போது மலை உச்சியை சமன் செய்து தேவாலயத்தை விரிவுபடுத்தும் பணியை நிர்வாகம் செய்து வருகிறது. இதற்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மலையில் சாலை அமைக்கும் பணியை செங்கம் திமுக எம்எல்ஏ கிரி தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ், கிராமத்தில் 1.32 லட்சம் ரூபாய் மதிப்பிலான மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் முருகேஷ் நேற்று துவக்கி வைத்தார். தொடர்ந்து, மலை மாதா சர்ச் பகுதியில் ஆய்வு செய்த அவர், மலையை சீரமைத்து விரிவாக்கம் செய்யும் பணி நடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அப்போது அங்கிருந்த வருவாய்த்துறை அதிகாரிகளிடம், ‘மலையை ஆக்கிரமித்து விரிவாக்கம் செய்ய அனுமதி வழங்கியது யார்?’ என கேள்வி எழுப்பினார். மேலும், இந்த மலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதா, வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் உள்ளதா, மலை மாதா தேவாலயம் உள்ள இடத்திற்கு நிலம் பட்டா வழங்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து, உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டார்.
Discussion about this post