WhatsApp Channel
என்றென்றும் அதிமுககாரன் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜக – அதிமுக கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது. பாஜகவுடன் இனி நிரந்தரக் கூட்டணி கிடையாது என்று அதிமுக திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
கூட்டணியை முறித்துக்கொண்டு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுக தலைமை அலுவலக செயலாளரும், கோவை தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.வேலுமணியை பாஜக பயன்படுத்தப் போவதாக பேச்சு எழுந்தது. எஸ்.பி.வேலுமணி பாஜகவில் இணைவதாகவும், அதிமுகவை உடைப்பதாகவும் சர்ச்சைகள் எழுந்தன.
மேலும் எஸ்பி வேலுமணியை அதிமுகவின் ஏக்நாத் ஷிண்டே என்று சமூக வலைதளங்களில் விமர்சித்தார்.
இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிமுக கொடியுடன் சைக்கிள் பேரணி நடத்திய புகைப்படத்தை தனது X சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து “என்றென்றும் அதிமுக காரன்” என பதிவிட்டுள்ளார்.
Discussion about this post