WhatsApp Channel
அமைச்சர் கீதாஜீவன் தொடர் உறக்கத்தில் இருந்து எழுந்து தனது துறை தொடர்பான பணிகளை கவனிக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் உள்ள உணவகங்களில் தரமற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஓட்டலில் வழங்கப்பட்ட சத்துணவு முட்டை முத்திரையுடன் இருப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். தனியார் விடுதியில் அரசு வழங்கும் சத்துணவு முட்டைகள் விற்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். தனியார் உணவகங்களுக்கு நல்ல முட்டைகளை விற்று, அழுகிய முட்டைகளை குழந்தைகள், மாணவர்களுக்கு வழங்குவதாக திமுக அரசை அண்ணாமலை கடுமையாக சாடினார். மேலும் அண்ணாமலை தூக்கத்தில் இருந்து விழித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார்.
இது குறித்து அண்ணாமலை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த 2 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் பல்வேறு பள்ளிகளில் மாணவர்களுக்கு அழுகிய முட்டை வழங்குவதை தமிழக பா.ஜ.க.வினர் பலமுறை கண்டித்தும், தரமான முறையில் வழங்க அமைச்சர் கீதாஜீவன் நடவடிக்கை எடுக்கவில்லை. மாணவர்களுக்கு முட்டை, அதுபற்றி எந்த விளக்கமும் அளிக்கவில்லை.இப்போது, கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியில் உள்ள, தனியார் உணவகத்தில், குழந்தைகளுக்கு, அரசு சீல் வைக்கப்பட்ட முட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
தனியார் உணவகங்களுக்கு தரமான முட்டைகளை விற்பதும், அழுகிய முட்டைகளை குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு வழங்குவதும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அமைச்சர் கீதாஜீவன் தொடர்ந்து உறக்கத்தில் இருந்து எழுந்து தனது துறை தொடர்பான பணிகளை கவனிக்க வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பில் வலியுறுத்துகிறேன்”
Discussion about this post