WhatsApp Channel
சாலை நடுவே இப்படி சாலையை உடைத்து கொடி வைக்கும் தைரியம் இவர்களுக்கு எப்படி வருகிறது? ஆளுங்கட்சி என்றால் மாநிலத்தை விலைக்கு வாங்கியவர்களா என்ன? சிறிதளவாவது பொது அறிவு கொண்டவர்கள் இப்படி ஒரு செயலை செய்வார்களா?
ஹெல்மெட் போடாதவர்களை எல்லாம் விரட்டி பிடித்து அபராதம் விதிக்கும் போக்குவரத்து காவல்துறை கண்களில் சாலை நடுவே இருக்கும் ஆபத்தான இந்த கொடி கம்பங்கள் தெரியாதா? இதை கண்டும் காணாமல் இருக்கவா IPS படித்து உயர் அதிகாரிகளாக சம்பளம் வாங்கிக் கொண்டு இருக்கிறீர்கள்?
ஏற்கனவே சென்னையில் ஓட்டை ஓடிசலாக கிடக்கும் சாலைகளை சீரமைத்துக் கொண்டு இருக்கும் சென்னை மாநகராட்சிக்கு நல்ல சாலையை ஓட்டை போட்டு நாசமாக்கும் சமூக விரோதிகள் பற்றிய கவலையே கிடையாதா?
சாலையை உடைத்து பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தி கொடி வைத்து வரவேற்றால் தான் விழாவுக்கு வருவேன் என்று சொல்ல அரசியல்வாதிகளுக்கு அசிங்கமாகவே இருக்காதா? ஆளுங்கட்சியே இப்படி சட்டத்தை மீறி பொது மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தினால் மற்ற கட்சிகள் சட்டத்தை மீறும் போது எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவர்களை தடுக்க முடியும்?
Discussion about this post