WhatsApp Channel
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் 20ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் ஜூன் 14ஆம் தேதி கைது செய்தனர்.120 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி இருமுறை மனு தாக்கல் செய்தார். இரண்டு முறையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது பதில் மனு தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி லிங்கேஸ்வரன் முன்பு செந்தில் பாலாஜி காணொலி காட்சி மூலம் ஆஜரானார். அப்போது செந்தில் பாலாஜியின் காவலை வரும் 20ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
Discussion about this post