WhatsApp Channel
குற்றவாளி அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாகிறது.
சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியை, மத்திய அமலாக்க இயக்குனரகம், ஜூன், 14ல் கைது செய்தது.இந்நிலையில், ஜாமின் கோரி, அவர் தாக்கல் செய்த மனு, சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில், இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
இந்நிலையில் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு நீதிபதி அறிவிக்க உள்ளார்.
Discussion about this post