WhatsApp Channel
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியை மத்திய அமலாக்க இயக்குனரகம் ஜூன் 14ஆம் தேதி கைது செய்தது.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இரண்டு முறை நிராகரித்தது. இதைத்தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற போது அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவை நீதிபதி ஜெயச்சந்திரன் தள்ளுபடி செய்தார். மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் மனுவை ஏற்க முடியாது என்று கூறி ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 30ம் தேதி நடைபெறும் என உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் அறிவித்துள்ளார்.
Discussion about this post