WhatsApp Channel
ராகுல் காந்தி மீண்டும் எம்.பி. ஆனதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி மீதான அவதூறு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதால், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் மக்களவை எம்.பி. பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்ததால் ராகுல் காந்தி மீண்டும் எம்.பி. இதை எதிர்த்து வழக்கறிஞர் அசோக் பாண்டே உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி பி.ஆர்.கவை தலைமையிலான அமர்வு, மனுதாரரின் எந்த அடிப்படை உரிமையும் மீறப்படாத நிலையில், இந்த மனு சட்ட நடைமுறையை தவறாக பயன்படுத்த முயற்சிப்பதாக கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
Discussion about this post