WhatsApp Channel
மக்களிடம் இன்னும் ரூ.10,000 கோடி 2,000 ரூபாய் நோட்டுகள் இருப்பதாக ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார்.
மே 19 அன்று, இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2,000 நோட்டுகளை படிப்படியாக திரும்பப் பெறுவதாக அறிவித்தது. 2,000 நோட்டுகளை பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் மாற்றவோ அல்லது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யவோ அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் கடைசி தேதி அக்டோபர் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
அக்டோபர் 8-ம் தேதி முதல், 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் தனிநபர்கள் ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.
இந்நிலையில், நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், “2000 ரூபாய் நோட்டுகள் திரும்பி வருகின்றன, இன்னும் 10000 கோடி ரூபாய் நோட்டுகள் மக்களிடம் உள்ளது. விரைவில் இந்த நோட்டுகள் திரும்பப் பெறப்படும் அல்லது வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.
Discussion about this post