WhatsApp Channel
தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரிக்க உத்தரவிடக் கோரிய பொதுநல மனு விசாரணை தொடர்பாக மத்திய அரசு, தமிழக அரசு, சி.பி.ஐ. பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கையைச் சேர்ந்த கருப்பையா காந்தி சார்பில் வழக்கறிஞர் சமீர் மாலிக் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இதில், முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள் க.பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி, வரமதி, கே.எஸ்.மஸ்தான், டி.எம்.அன்பரசன், சேகர்பாபு, துரைமுருகன், கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில் பாலாஜி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எம்.சுப்ரமணியம், எம். கதிர் அண்ணன் ஆகியோர் மீது தமிழகத்தில் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தயாநிதி மாறனை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் அல்லது வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும். நிலுவையில் உள்ள விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும்.
நிலை அறிக்கை
தமிழக அமைச்சர்கள் மீது தாமாக முன்வந்து தொடரப்பட்ட வழக்குகளை விரைந்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என்.நேரு, கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் மீது நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகளை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்.
இந்த வழக்குகளை விசாரிக்க தமிழகத்திற்கு வெளியில் இருந்து குற்றவியல் சட்டத்தில் அனுபவம் உள்ள நீதிபதிகளை நியமிக்க வேண்டும்.
தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகளின் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த பொது நல மனுவை நீதிபதிகள் சூர்யகாந்த், திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
ஆட்சேபனை
மனுதாரர் கருப்பையா காந்தி சார்பில் வக்கீல்கள் சமீர் மாலிக், ரவிபிரகாஷ், அஸ்து கண்டல்வால், மூத்த வழக்கறிஞர் தம்ம சேஷாத்திரி நாயுடு ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
கூடுதல் அட்வகேட் ஜெனரல் அமித் ஆனந்த் திவாரி, வழக்கறிஞர் டி.குமணன், மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, என்.ஆர். இளங்கோ ஆஜராகி எதிர்ப்பு தெரிவித்தார்.
உத்தரவு
வாதங்களை பதிவு செய்த நீதிபதிகள், இந்த பொதுநல வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து தமிழக அரசு, மத்திய அரசு மற்றும் சிபிஐ 3 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். இயக்குனர் மற்றும் தமிழக டிஜிபிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மனுதாரர் ஒரு வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை டிசம்பர் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Discussion about this post