WhatsApp Channel
பாஜகவில் சேர அழைப்பு விடுத்த நாகை மாவட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் 2 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நாகப்பட்டினத்தில் டிசம்பர் 27ஆம் தேதி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்ற “என் மண் என் மக்கள்” பாதயாத்திரை நடைபெற்றது. நாகை பொது அலுவலக சாலையில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, அப்பகுதியில் பந்தல் போடப்பட்டு, பா.ஜ.,வில் சேர விரும்புவோர், மொபைல் போனில் இருந்து மிஸ்டு கால் கொடுத்தால், பா.ஜ.,வில் சேர்க்கப்படுவர் என, அறிவிக்கப்பட்டது. அதன்படி அங்கிருந்த பலர் மிஸ் கால் கொடுத்து பா.ஜ.க.வில் இணைந்தனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ராஜேந்திரன், கார்த்திகேயன் ஆகியோர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன், கார்த்திகேயன் இருவரும் சீருடையில் அங்கு சென்று விவரம் கேட்டு பா.ஜ.க.வில் சேருமாறு செல்போனில் இருந்து மிஸ்டு கால் கொடுத்தனர். இது தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.
இதையடுத்து நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன், கார்த்திகேயன் ஆகியோர் விசாரணை நடத்தி தஞ்சை சரக டிஐஜிக்கு அறிக்கை அனுப்பினர். அதன் அடிப்படையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன், கார்த்திகேயன் ஆகியோர் நாகை ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post