WhatsApp Channel
தமிழக அரசின் ஆணவப்போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று எல்.முருகன் கூறியுள்ளார்.
எக்ஸ் தளத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழக சட்டப் பேரவையில், இந்த ஆண்டு முதல் நாள் ஆளுநர் உரை தொடங்கும் போது, அவை தேசிய கீதத்துடன் தொடங்க வேண்டும் என்று ஆளுநர் கூறியுள்ளார். அதைக்கூட செய்ய முடியாது என்ற தமிழக அரசின் ஆணவப்போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தராசில் முள்ளாக இருக்க வேண்டிய சபாநாயகர் அப்பாவு, ஆளுநரை பக்கத்தில் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகளை கேள்வி கேட்கும் அமைச்சராக செயல்படுகிறார்.
இதுதான் ஜனநாயகமா?
மக்கள் போற்றும் பேரவையை இப்படித்தான் நடத்த வேண்டுமா?
தேசிய கீதத்தை புறக்கணித்து, கவர்னரை அவமதித்து, இந்திய அரசியலமைப்பை அவமரியாதை செய்வது தான் போலி திராவிட மாடல் அரசா…? அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post