WhatsApp Channel
மீட்கப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.
சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள லடாக் பகுதிக்கு சென்றார். அவருடன் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை சேர்ந்த உதவியாளர் கோபிநாத்தும் சென்றார். கடந்த 4ம் தேதி மாலை வெற்றி துரைசாமி சென்னை திரும்புவதற்காக விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டார்.
இந்நிலையில் கஷாங் நாலா மலைத்தொடரை நெருங்கும் போது கட்டுப்பாட்டை இழந்த கார் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து அருகில் ஓடும் சட்லஜ் ஆற்றில் பாய்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் தஞ்சின் உயிரிழந்தார். மேலும் கோபிநாத் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வெற்றி துரைசாமியை காணவில்லை. அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது.
இதற்கிடையில், விபத்து நடந்த இடத்தில் இருந்து ரத்தக் கறைகள் மற்றும் திசுக்கள் சேகரிக்கப்பட்டு டி.என்.ஏ. சோதனைக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில் விபத்தில் சிக்கிய வெற்றி துரைசாமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. 8 நாட்களுக்கு பிறகு வெற்றி துரைசாமியின் உடலை மீட்பு குழுவினர் மீட்டனர். விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 2 கிமீ தொலைவில் அவரது உடல் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.
Discussion about this post