WhatsApp Channel
உயர்நீதிமன்ற நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து அண்ணாமலை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்
கடந்த 2022ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தீபாவளிப் பண்டிகையில் பட்டாசு வெடிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் முதன்முதலில் வழக்குத் தொடுத்தது கிறிஸ்துவ மிஷனரிதான் என்று குறிப்பிட்டார்.
அண்ணாமலையின் பேச்சு இரு மதத்தினரிடையே வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் உள்ளது என்று சேலத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மனுஷ் என்பவர் சேலம் நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது புகார் அளித்திருந்தார்.
இது தொடர்பாக நேரில் ஆஜராகும்படி அண்ணாமலைக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. இந்த சம்மனை எதிர்த்தும், தன் மீதான புகாரை ரத்து செய்ய வேண்டும் என்றும் அண்ணாமலை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அண்ணாமலை தாக்கல் செய்த மனுவை நிராகரித்து, அவர் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்து, இந்த மனுவை சேலம் நீதிமன்றம் சட்டப்படி விசாரிக்கலாம் என உத்தரவிட்டார்.
உயர்நீதிமன்ற நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து அண்ணாமலை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அண்ணாமலை தன் மீதான வழக்கை நிறுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
Discussion about this post