WhatsApp Channel
2011 முதல் 2015 வரை அ.தி.மு.க., ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, பலருக்கு வேலை வாய்ப்பு தருவதாக கூறி, பல கோடி ரூபாய் முறைகேடாக பணம் பெற்றதாக புகார் எழுந்தது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில், அமலாக்கத் துறையினரும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
அதன்படி, அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து, செந்தில் பாலாஜியை ஜூன் 14ஆம் தேதி கைது செய்தது.
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி.
இந்நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. செந்தில் பாலாஜி 30 வழக்குகளில் சிக்கியுள்ளதால், அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என அமலாக்கத் துறையினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அமலாக்கத் துறைக்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற செந்தில் பாலாஜியின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.
திங்கள்கிழமைக்கு பதிலாக, புதன்கிழமை விசாரணை நடைபெறும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்துள்ளார்.
Discussion about this post