“வளர்ச்சியில் பின்தங்கிய மக்களைக் கல்வி, அரசியல் மற்றும் அதிகார அமைப்புகளின் மையத்தில் கொண்டு வந்த தலைசிறந்த இந்திய அரசியல்வாதிகளில் ஒருவர் லாலு பிரசாத். அவரின் பிறந்த நாளையொட்டி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவரான லாலு பிரசாத் யாதவுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்.
மேலும், அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
“மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை உறுதியாக நடைமுறைப்படுத்தியவர், மதவாத எண்ணங்கள் எதிர்முகமாக வளரும் சூழ்நிலையில் அதனைத் தடுக்கும் போராளியாகவும், சமூகநீதி பற்றிய தேசிய விவாதத்திற்கு புதிய திசை காட்டிய முக்கிய அரசியல் தலைவராகவும் லாலு பிரசாத் விளங்குகிறார். அவர் நீடித்த காலம் நலமுடன் வாழ நான் பிரார்த்திக்கிறேன்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.