WhatsApp Channel
ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் ஸ்குவாஷ் அணி பிரிவில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
சீனாவின் ஹாங்சோ நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய அணி தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது.
இந்நிலையில், ஸ்குவாஷ் ஆடவர் அணி பிரிவில் இந்திய அணிக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது.
சவுரவ் கோஷல், மங்கோகர் மகேஷ் அடங்கிய இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. போட்டி மிகவும் பரபரப்பாக இருந்தது. இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது. இதன் மூலம் இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
Discussion about this post