WhatsApp Channel
மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதால் காங்கிரஸ் கட்சி கடும் கோபத்தில் உள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு அங்கு காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் நடைபெற்ற ‘பரிவர்தன் மகாசங்கல்ப்’ நிகழ்ச்சியில் பா.ஜ., பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றிய காங்கிரஸ் கடும் கோபத்தில் உள்ளது.காங்கிரஸ் பெண்களை சாதி ரீதியாக பிரிக்க முயல்கிறது.மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஆயிரம் ஆண்டுகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்.
காங்கிரஸ் கட்சியைப் போல ஏழைகளுக்கு இவ்வளவு அநீதி இழைத்தவர்கள் வேறு யாரும் இல்லை. கரோனா தொற்றுநோய்களின் போது ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்க உத்தரவிட்டேன். ஆனால் சத்தீஸ்கர் அரசும் ஊழல் நிறைந்தது. சத்தீஸ்கரில் பாஜக ஆட்சிக்கு வந்தால், அனைத்து ஏழை மக்களுக்கும் தரமான வீடுகள் கட்டித் தருவதே அமைச்சரவையின் முதல் முடிவாகும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
Discussion about this post