WhatsApp Channel
பார்வையாளர் ஒருவர் வீசிய தேசியக் கொடியை தடகள வீரர் நீரஜ் சோப்ரா கீழே விழாமல் தடுத்து நிறுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஹாங்சோ,
19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சூ நகரில் நடைபெற்று வருகிறது. ஈட்டி எறிதல் போட்டியில், 4வது வாய்ப்பில் அதிகபட்சமாக 88.88 மீ., தூரம் எறிந்த நீரஜ் தங்கம் வென்றார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் அவர் வென்று வரும் 2வது தங்கம் இதுவாகும்.
இந்நிலையில், தங்கம் வென்ற உற்சாகத்தில் ஸ்டேடியத்தை சுற்றி படம் எடுக்கச் சென்று கொண்டிருந்த நீரஜ் சோப்ரா மீது பார்வையாளர் ஒருவர் நமது மூவர்ண தேசியக் கொடியை வீசினார். நீரஜ் சோப்ரா உடனடியாக அதை கீழே விழவிடாமல் பிடித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Discussion about this post