WhatsApp Channel
5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 2-0 என முன்னிலை வகிக்கிறது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 2வது போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியாவை 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இதையடுத்து இவ்விரு அணிகள் மோதும் மூன்றாவது போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நாளை நடக்கிறது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடலாம் என்பதால் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம் தொடரை இழக்காமல் இருப்பதில் ஆஸ்திரேலிய அணி உறுதியாக இருக்கும். எனவே இந்த விளையாட்டில் சுவாரஸ்யங்களுக்கு பஞ்சம் இருக்காது. இந்தப் போட்டி நாளை இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.
Discussion about this post