WhatsApp Channel
மொத்தம் 10 சுற்றுகளாக நடைபெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தற்போது நிறைவடைந்துள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும். பொங்கல் பண்டிகை தினமான இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மொத்தம் 825 காளைகளுடன் காலை 7 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில் 300க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். மொத்தம் 10 சுற்றுகளாக நடைபெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தற்போது நிறைவடைந்துள்ளது.
கார்த்தி என்ற வீரர் 17 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. இதேபோல் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் வீரர்களை தெறிக்கவிட்டு முதலிடம் பிடித்த ஜி.ஆர்.கார்த்திக் காளைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் வழங்கப்பட்டது.
இப்போட்டியில் 13 காளைகளை அடக்கியதன் மூலம் ரஞ்சித்குமார் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். 9 காளைகளை அடக்கிய முரளிதரன் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.
48 பேர் காயம்:
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் தலைமைக் காவலர், சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 48 பேர் காயமடைந்தனர். 19 மாடுபிடி வீரர்கள், 25 காளை உரிமையாளர்கள், 2 பார்வையாளர்கள், 2 காவலர்கள் என மொத்தம் 48 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
Discussion about this post