WhatsApp Channel
தற்கொலைக்கு பயன்படுத்திய கத்தி அவரது சடலத்தின் அருகே ரத்த வெள்ளத்தில் கிடந்தது.
மத்தியப் பிரதேசத்தின் மைஹார் மாவட்டத்தில் உள்ள ஒரு மலையில் இந்து தெய்வமான சாரதா மாதாவின் சன்னதி உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், இந்த கோவிலுக்கு நேற்று வந்த பக்தர் ஒருவர், கோவில் வளாகத்தில் போக்குவரத்து இல்லாத பகுதியில் தற்கொலை செய்து கொண்டார். அந்த நபர் தான் கொண்டு வந்த கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.
கோவிலில் பணிபுரியும் ஊழியர்கள், கோவில் வளாகத்தை சுற்றி பார்த்தபோது, ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்டவர் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தை சேர்ந்த லாலராம் (வயது 37) என தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post