WhatsApp Channel
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் ராமர் சிலை பிரதிஷ்டை விழா வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமருக்கு பிரம்மாண்ட கோவில் கட்டப்பட்டுள்ளது. பிரதமர் மோடி அதன் கட்டுமானத்தை 2020 இல் தொடங்கினார். 225 அடி அகலம், 360 அடி நீளம் மற்றும் 161 அடி உயரம் கொண்ட இந்த கோயில் பிரமாண்டமாகவும் கலைநயமிக்கதாகவும் உள்ளது.
வட இந்திய கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த பிரமாண்ட ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் மற்றும் ராமர் சிலை பிரதிஷ்டை விழா வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக உத்தரபிரதேச அரசு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. சிறப்பு பூஜைகளுக்கு பின், 22ம் தேதி ராமர் சிலை பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம் நடக்கிறது.
பிரதமர் மோடி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் நாடு முழுவதும் உள்ள இந்து சாதுக்கள், முக்கிய பிரமுகர்கள் என சுமார் 7 ஆயிரம் பேர் விழாவில் பங்கேற்கின்றனர். இந்த விழாவில் 55 நாடுகளைச் சேர்ந்த 100 முக்கியஸ்தர்கள் கலந்து கொள்கின்றனர். கோவில் அறக்கட்டளை சார்பில் ஏராளமான உள்நாட்டு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களுக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி, நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் மின்விளக்குகள் ஒளிரச் செய்ய ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கும்பாபிஷேக விழாவை கிராமங்களில் ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Discussion about this post