WhatsApp Channel
அரசின் வழிகாட்டுதலின்படி கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானத்தில் போட்டிகள் நடத்தப்படும்.
ஜல்லிக்கட்டுக்கு உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் அருகே பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் ஜல்லிக்கட்டு மைதானப் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்தன.
கடந்த வாரம் பணிகள் முடிந்து பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் திறப்பு விழாவுக்கு தயாராக இருந்தது. இம்மாத இறுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து ஜல்லிக்கட்டு மைதானத்தை திறந்து வைப்பார் என அமைச்சர்கள் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், மதுரை கீழக்கரையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 24ம் தேதி திறந்து வைக்கிறார். அன்றைய தினம் அங்கு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மதியம் 12 மணி முதல் நாளை மதியம் 12 மணி வரை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 20ம் தேதிக்குள் http://madurai.nic.in என்ற இணையதளம் மூலம் காளைகளின் பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், அரசின் வழிகாட்டுதலின்படி கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானத்தில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
Discussion about this post