WhatsApp Channel
சாமிதோப்பு அய்யா வைகுண்டசுவாமி திருவிழாவின் 2ம் நாளான நேற்று இரவு 7 மணிக்கு அய்யா பரங்கி நாற்காலியில் பவனி வருதலும், நாளை அன்ன வாகனத்தில் வெள்ளை சாத்தி வீதியுலாவும் நடக்கிறது.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி, தை மாதங்களில் 11 நாள் திருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான தைத்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு பள்ளியின் முத்திரை பதமிடு திறப்பு, 5 மணிக்கு அய்யாவுக்கு சேவை, கொடியேற்றம், 6.30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. நிகழ்ச்சிக்கு குரு சுவாமிகள் தலைமை வகித்தார். குரு ராஜசேகரன் கொடியேற்றினார். பூசாரிகள் தங்கப்பாண்டியன், ஆனந்த், அரவிந்த், அஜித் ஆகியோர் முன்னிலை வகித்து பள்ளி பணியை செய்தனர். மதியம் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம், இரவு 7 மணிக்கு அய்யா தீண்டல் வாகனத்தில் பவனி சுற்றி பவனி நடந்தது. கொடியேற்று விழாவில் குமரி, நெல்லை மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவின் 2-ம் நாளான இன்று (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு அய்யா பேராலயத்தில் பவனியும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) அன்ன வாகனமும் வெள்ளை சாத்தி வீதியுலா நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலை அய்யா வைகுண்டர் வாகனத்தில் பவனி வருதல், சிறப்பு திருப்பலி, பாராயணம், உக்குபானை, சமய சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். 26ம் தேதி மாலை 6 மணிக்கு முத்திரி கிணற்றின் கரையில் அய்யா வெள்ளைக்குதிரை வாகனம் வேட்டையாடுதல், தொடர்ந்து குதிரை வாகனத்தில் பல ஊர்களுக்கு சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தல், இரவு 11 மணிக்கு வடக்கு வாசல் அய்யா தவக்கோலம், அன்னதர்மம். நடைபெறும்.
விழாவின் 11ம் நாளான 29ம் தேதி பகல் 12 மணிக்கு அய்யா வைகுண்டசாமி ஊர்வலமும், நள்ளிரவு 12 மணிக்கு அய்யா கலா வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
Discussion about this post