WhatsApp Channel
பாகிஸ்தான்-ஈரான் இரு நாட்டு வெளியுறவு அதிகாரிகளும் நல்லெண்ண செய்திகளை பரிமாறிக் கொண்டனர்.
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து கடந்த 16ம் தேதி ஈரான் விமானப்படை ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக, கடந்த 18ம் தேதி, ஈரானில் உள்ள பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் மீது பாகிஸ்தான் விமானப்படை வான்வழி தாக்குதல் நடத்தியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஜலீல் அப்பாஸ் ஜிலானியும், ஈரான் வெளியுறவு அமைச்சர் உசைன் அமீர்- அப்துல்லாஹியானும் நேற்று தொலைபேசியில் பேசினர். அப்போது ஜலீல் அப்பாஸ் ஜிலானி கூறுகையில், பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையில் அனைத்து விவகாரங்களிலும் ஈரானுடன் இணைந்து செயல்பட பாகிஸ்தான் தயாராக உள்ளது.
பாதுகாப்பு விவகாரங்களில் நெருக்கமான ஒத்துழைப்பின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். முன்னதாக, இருநாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகளும் நல்லெண்ண செய்திகளை பரிமாறிக்கொண்டனர். அதேபோல், பாகிஸ்தான் அரசும், ராணுவத் தலைவர்களும் ஈரானுடனான மோதல் குறித்து உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் விவாதித்தனர்.
Discussion about this post