WhatsApp Channel
கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் ஆரிப் முகமது கான் ஆகியோர் பிரதமர் மோடியை வரவேற்றனர்.
ஆந்திரா மற்றும் கேரளாவுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி இன்று காலை பிரதமர் மோடி ஆந்திரா சென்றார். ஆந்திர மாநிலம் லெபக்ஷியில் உள்ள வீரபத்ர சுவாமி கோவிலுக்கு பிரதமர் மோடி சென்றார். தொடர்ந்து, கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி ‘ஸ்ரீராம் ஜெய்ராம்’ பஜனை பாடினார். அயோத்தி ராமர் கோவில் பிரமாண்ட கும்பாபிஷேக விழாவுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் ராமாயணத்தில் சிறப்பு வாய்ந்த லெபக்ஷிக்கு மோடி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் ஆந்திராவில் இருந்து விமானம் மூலம் கொச்சி விமான நிலையத்துக்கு பிரதமர் மோடி வந்தார். விமான நிலையத்தில் அவரை கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் ஆளுநர் ஆரிப் முகமது கான் ஆகியோர் வரவேற்றனர். கேரளா செல்லும் பிரதமர் மோடி, அங்கு குருவாயூர் கிருஷ்ணர் கோயில் மற்றும் திரிபிராயர் ராமசாமி கோயிலுக்குச் செல்கிறார்.
Discussion about this post