WhatsApp Channel
அப்துல்லா தலைமையிலான பயங்கரவாத அமைப்பு ஈரானிடம் இருந்து நிதியுதவி மற்றும் உத்தரவுகளை பெறுவதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு திடீரென இஸ்ரேல் மீது படையெடுத்து வன்முறைத் தாக்குதல்களை நடத்தியது. இதைத் தொடர்ந்து சிலர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேலும் வான், தரை மற்றும் கடல் தாக்குதல்களில் ஈடுபட்டது.
ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை ஒழிக்கும் வரை ஓயப்போவதில்லை என இஸ்ரேல் அரசு உறுதியளித்துள்ளது. இந்நிலையில், பயங்கரவாத அமைப்பின் தலைவர் அப்துல்லா அபு ஷலால், இஸ்ரேல் பாதுகாப்பு படையினரின் வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டார். நப்லஸ் நகரில் உள்ள பலடா முகாம் பகுதியில் அப்துல்லா தங்கியுள்ளார்.
இந்நிலையில் அவர் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது படையினர் தாக்கியுள்ளனர். இதில் அப்துல்லாவும், அவருடன் இருந்த பயங்கரவாதிகள் சிலரும் கொல்லப்பட்டனர். எதிர்காலத்தில் மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
ஜூடியா மற்றும் சமாரியாவில் பல முக்கிய பயங்கரவாத உள்கட்டமைப்புகளில் ஒன்றை கட்டியெழுப்புவதற்கு அப்துல்லா பொறுப்பு என்று இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது.
இவர் கடந்த காலங்களில் பல தாக்குதல்களை நடத்தியுள்ளார். அதில், கடந்த ஏப்ரல் மாதம் ஜெருசலேமின் ஷிமோன் ஹட்ஜாடிக் பகுதியில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. 2 பொதுமக்கள் காயமடைந்தனர்.
இது தவிர, கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேல் படைகள் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்கும் இவரே பொறுப்பு. இதில் ஒரு வீரர் காயம் அடைந்தார்.
அப்துல்லா தலைமையிலான பயங்கரவாத அமைப்பு ஈரானில் உள்ள சிலரிடமிருந்து நிதியுதவி மற்றும் உத்தரவுகளைப் பெறுவதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது.
Discussion about this post