WhatsApp Channel
தற்போதைய ஐ.பி.எல்., போட்டியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி. இந்த தொடரில் தனது முதல் சதத்தை அடித்தார்.
ஐபிஎல் தொடரில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட் செய்த பெங்களூரு அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலியும், பாப் டு பிளெசிஸும் களம் இறங்கினர்.
இருவரும் சிறப்பாக விளையாடி அணிக்கு ரன் சேர்த்தனர். அதே சமயம் கவனமாக விளையாடினார்கள். இதனால் அந்த அணியின் ஸ்கோர் சற்று அதிகரித்தது. இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ரன் விகிதத்தை அதிகரித்தனர்.
நடப்பு சீசனில் முதன்முறையாக 100 ரன்களை கடந்த இவர்களின் பார்ட்னர்ஷிப் 125 ரன்களில் முறிந்தது. டு பிளெசிஸ் 44 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த மேக்ஸ்வெல் இம்முறையும் ஏமாற்றம் அளித்தார். தற்போதைய ஐ.பி.எல்., போட்டியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி. தொடரில் முதல் சதம் அடித்தார். அதுமட்டுமின்றி, நடப்பு சீசனில் அடிக்கப்பட்ட முதல் சதம் இதுவாகும்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 3 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 113 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் சாஹல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற வலுவான இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி களமிறங்கும்.
Discussion about this post