WhatsApp Channel
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 9ஆம் தேதி நடைபெறும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்,
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 9-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது.
கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து சட்டப்பேரவை ஆய்வுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.
2023-24ம் ஆண்டுக்கான கூடுதல் செலவினத்துக்கான மானியக் கோரிக்கை சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது,” என்றார்.
Discussion about this post