WhatsApp Channel
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் நாளை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இதனிடையே, வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள கனமழை எச்சரிக்கையை அடுத்து தமிழகத்தின் 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் நாளையும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் 10 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post