WhatsApp Channel
அடுத்த கட்டமாக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக அமர் பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார்.
சென்னை பனையூரில் பா.ஜ.க. கொடிக்கம்பத்தை அகற்றும் போது மாநகராட்சியின் ஜே.சி.பி. இயந்திரத்தை சேதப்படுத்திய விவகாரத்தில் பா.ஜ.க. நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், பா.ஜ., நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி, செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில், கடந்த, 30ம் தேதி ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு மீதான விசாரணை, நேற்று நடந்த நிலையில், விசாரணை, இன்றைக்கு (4ம் தேதி) ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி இன்று மீண்டும் விசாரணை நடைபெற்ற போது அமர்பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அமர் பிரசாத் ரெட்டி கூறுகையில், அடுத்த கட்டமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.
Discussion about this post