WhatsApp Channel
கிழக்கு ஸ்பெயினில் நேற்று (நவம்பர் 3) காட்டுத்தீயால் சுமார் 4,900 ஏக்கர் நிலம் எரிந்து நாசமானது.
கிழக்கு ஸ்பெயினில் உள்ள வலென்சியாவில் வெள்ளிக்கிழமை திடீரென வீசிய புயல் காரணமாக காட்டுத் தீ ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சுற்றியுள்ள நான்கு நகரங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
தொடர்ந்து இரண்டாவது நாளாக காட்டுத் தீ பரவி வருகிறது. இதையொட்டி அந்த பகுதிகளுக்கு பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தீயை அணைக்கும் பணியில் 200க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் அந்நாட்டு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Discussion about this post