WhatsApp Channel
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறியுள்ளது. அதற்கு மிஜாம் என்று பெயரிடப்பட்டது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. தற்போது மழைநீர் தேங்கும் பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மின் வாரியம் மூலம் படிப்படியாக மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் ஒரு சில இடங்களில் 2 நாட்களாக மின் விநியோகம் இல்லை. விரைவில் மின்சாரம் வழங்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்நிலையில், புதுவண்ணாரப்பேட்டை காமராஜர் சாலை சந்திப்பில் மின்சாரம் வழங்கக் கோரி பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலைகளில் தடுப்புகள் மற்றும் தடுப்புகளை வைத்து போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் 2 மணி நேரத்தில் மின்சாரம் வழங்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து, உடனடியாக மின்விநியோகம் செய்யப்பட்டது. 2 நாட்களாக மின்சாரம் இல்லாமல் தவித்து வந்த மக்கள், மின்சாரம் சீரானவுடன் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
Discussion about this post