WhatsApp Channel
ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா தலைவர் அவரது வீட்டில் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஸ்ரீ ராஷ்ட்ரிய ராஜ்புத் கர்னி சேனாவின் தலைவராக இருப்பவர் சுக்தேவ் சிங் கோஹமேடி. லோகேந்திர சிங்குடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஸ்ரீ ராஜ்புத் கர்னி சேனாவில் இருந்து பிரிந்து 2015ல் ஸ்ரீ ராஷ்ட்ரிய ராஜ்புத் கர்னி சேனாவை தொடங்கினார். 2018 ஆம் ஆண்டு வெளியான பத்மாவதி படத்திற்கு எதிராக அந்த அமைப்பு போராட்டங்களை நடத்தியது.
இந்நிலையில், ஸ்ரீ ராஷ்ட்ரிய ராஜ்புத் கர்னி சேனா கட்சியின் தலைவர் சுக்தேவ் சிங், ஜெய்ப்பூர் ஷைம் நகரில் உள்ள தனது வீட்டில் இன்று வந்தார். அப்போது, அவரை சந்திக்க 3 பேர் வந்தனர்.
வீட்டுக்குள் இருந்த 3 பேரையும் சுக்தேவ் சிங் அழைத்து பேசிக் கொண்டிருந்தார். சுக்தேவ் சிங்கின் பாதுகாவலர்களும் அங்கு இருந்தனர். அப்போது, சுக்தேவ் சிங்கை சந்திக்க வந்தவர்களில் இருவர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுக்தேவ் சிங் மீது துப்பாக்கியால் தீவிரவாதிகள் சுட்டனர்.
இதில் சுக்தேவ் சிங் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுக்தேவ் சிங்கின் பாதுகாவலரும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார். சுக்தேவ் சிங்கின் பாதுகாவலர்கள் உடனடியாக மீட்கப்பட்டு திருப்பிச் சுட்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டில், தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் பலியானார். எனினும், தாக்குதல் நடத்தியவர்களில் மீதமுள்ள 2 பேர் தீவிரவாதிகள் தப்பியோடிவிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே சுக்தேவ் சிங்கை சுட்டுவிட்டு தப்பியோடிய 2 தீவிரவாதிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Discussion about this post