WhatsApp Channel
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 30ஆம் தேதி திறந்து வைத்தார்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை கடந்த 30ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து விரைவுப் பேருந்துகள் உள்ளிட்ட அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையத்தில் இருந்து நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் பேருந்துகளை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சர்வீஸ் ரோடு வழியாக பஸ்கள் செல்வதால், சிரமம் ஏற்படுவதாக, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் பேருந்துகள் இயக்கப்படுவதால் சர்வீஸ் சாலையை பயன்படுத்த முடியாமல் போக்குவரத்து போலீசார் பள்ளி வாகனங்களை அரசு பேருந்துகள் செல்லும் சாலையில் திருப்பி விடுவதாகவும் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மறியலில் ஈடுபட்டவர்களிடம் கூடுவாஞ்சேரி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து ஜிஎஸ்டி சாலை வழியாக பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
Discussion about this post